Sunday, April 15, 2012

அலட்சியம் வேண்டாம் சிந்தித்து செயல்படுவோம்.


அலட்சியம் வேண்டாம் சிந்தித்து செயல்படுவோம்.


இன்றைய கால கட்டத்தில் அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தின் இன்றியமையாத தேவையாகும். உலகஅரசியல், இஸ்லாமிய அரசியல் என்று பீற்றிக்கொண்டு சொந்த வீட்டுக்குல் சோம்பேரிகளாக தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு அவல நிலையிலேயே இலங்கை முஸ்லிம்களின் அரசியல் காணபடுகின்றது. ஒரு நாட்டின்சிறுபான்மை சமூகமாக வாழும் நாம் எமது உடமைகளையும், உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கானஇலகுவான மற்றும் பலமான கேடயம் எமது அரசியல் அமைப்பாகும். நாம் எமது பிந்திய வரலாறுகளை, பெற்றுக்கொண்ட பெறுபேருகளை உன்னிப்பாக அவதானித்தால் எமது சமூகத்தின் இன்றைய பாதாள யாத்திரை நன்குபுலப்படும்.

எமது அலட்சியத்தாலும், அக்கறையின்மையாலும் பல அரசியல் அபிலாஷைகளை இழந்து முஸ்லிம் சமூகம்அநாதையாக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. சுய நல அரசியல்வதிகளின் மாயவலைக்குல் சிக்குண்டு மடிந்துகொண்டிருக்கும் முஸ்லிம்கள் விழித்துக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய காலகட்டம் இதுவாகும். இன்றையஇலங்கை முஸ்லிம்களின் அரசியல் அற்பமான பேராசைகளுக்காக, இன்பமூட்டப்பட்ட பேச்சுக்களால்,பிரதேசவாதங்களால் ஒடுக்கப்பட்டுள்ளமை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இன்று இலங்கையில் இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பலதிட்டமிடப்பட்ட ஒடுக்கு முறைகளை, பிரசாரங்களை சில இனவாத குழுக்கள் முடக்கிவிட்டு மிகவும் தீவிரமாகசெயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களிடம் வியாபார கொடுக்கள் வாங்களை பகிஷ்கறித்தல், இஸ்லாம்பற்றிய போலியான அபிப்பிராயங்ளை மாற்று மதத்தவர் மத்தியில் பரப்புதல், திட்டம்தீட்டி முஸ்லிம்களின்ஒற்றுமையை குழைத்தல், அரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்துதல், அல் குர் ஆன் வசனங்களை திரிபுபடுத்திபிரசாரங்களை மேற்கொள்ளுதல் என வேகமாக பயணித்துக் கொண்டிருகின்றனர். இற்செயற்படுகளால் இஸ்லாம்பற்றிய தெளிவற்ற முஸ்லிம் சகோதரர்கள் கூட மனதளவில் பலவீனமடைந்து போகக்கூடியதை இன்று வெகுவாககாணமுடிகின்றது. எமது அலட்சியங்களால் முஸ்லிம் சமூகம் குருடாக திசையின்றி, இலக்கின்றிசிதறிக்கொண்டிருப்பதை நாம் உணரலாம். இந்த விடயங்களை அலசி ஆராயும் போது கல்வி, அரசியல்,பொருளாதாரம் போன்ற பல கோணங்களில் நோக்கலாம்.

இன்று அனைவராலும் பேசப்படும் ஒரு பிரதான விடயம் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் ஒடுக்கு முறைகளாகும். கடந்த காலங்களில் பல விடயங்களில் எமது அபிலாஷைகளைஇழந்தும், அரசாங்க ஒதுக்கீடுகளில் இருந்து புரக்கணிக்கப்பட்டும், சில அத்தியவசியமற்ற இஸ்லாத்துக்கு முரணான விடயங்கள் எம்மீது திணிக்கப்பட்டமையும் நாம் கடந்த காலங்களில் எமதுகண்களூடாக கண்டவைகளே ஆகும். கடந்த மாதங்களில் நடைபெற்ற SLAS பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டோரில் முஸ்லிகள் புரகணிக்கப்பட்டதும் சிறந்த உதாரணங்களாகும்.

இவ் விடயங்களை மென்மேலும் அலட்சியம் செய்வது எம்மையே நாம் பாரிய விளைவுளுக்கு இட்டுச் செல்லக்கூடிய அறிகுறிகளை எம்மால் கண்டுகொள்ள கூடியதாக உள்ளது. டி.பி. ஜாயா,டாக்டர். கலீல், பதுர்தீன் மஹ்மூத், ராஷிக் பரீத் மற்றும் அஷ்ரப் போன்ற முஸ்லிம்களுக்காக எப்போதும் குரல் கொடுத்த அரசியல்வாதிகளை கொண்டிருந்த எமது தற்போதய நிலை என்ன??கடந்த கால தேர்தல்களில் நாம் கற்றுக் கொண்ட படிபினைகள் என்ன?? முஸ்லிம்களது பிரச்சினைகளுக்கு முன்வந்து குரல் கொடுக்க கூடிய தற்போதைய அரசியல்வாதிகள் யார்????

கடந்த ஒரு தசாப்த்த கால தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் போது பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டாலும், முஸ்லிம்களின் அபிலாஷைகளைஅரசியல் ரீதியாக வென்றெடுப்பதில் நாம் கடந்த காலங்களை விட தற்போது மிகவும் பின் தங்கியே காணப்படுகின்றோம். மர்ஹும் அஷ்ரப் அவர்களின் இழப்பிற்கு பின் முஸ்லிம்களுகாக‌எப்போதும் குரல் கொடுக்க கூடிய ஒரு சிறந்த அரசியல்வாதியை கண்டு கொள்வதில் எமது சமூகம் இன்னும் தடுமாறிக் கொண்டுள்ளது.

பாராளுமன்றத்தில் எமது பிரதி நிதித்துவம் எண்ணிக்கையில் அதிகரித்தாலும் சுய நலம், பொறாமை, போட்டி, தலைமைத்துவ ஆசை, பிடிவாதம் போன்ற காரணங்களால் பல பிரிவுகளாகபிரிந்து ஒற்றுமையின்றி மந்தையிலிருந்து பிரிந்து ஒநாய்களிடம் சிக்கிய ஆடுகளை போன்றே எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகளை விடபிரதேசவாதங்களுக்காவும், சுய நலங்களுக்காகவும் இவர்களை ஆதாரிக்கும் நாமே குற்றவாளிகள். முஸ்லிம்கள் மீது அக்கறை, அன்பு கொண்ட சேவை உணர்வுள்ள, இறையச்சம் கொண்டஎந்த அரசியல் வாதிகளும் முஸ்லிம்களிம் பிரதி நிதித்துவத்தை பல கூறுகளாக பிளவு படுத்தி பலவீனமாக்கும் இழியசெயலை செய்யமாட்டார்கள். இன்று அனைத்து முஸ்லிம் அரசியல்கட்சிகளும் தமது கடந்தகால நிகழ்வுகளை மறந்து முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது கட்டாய தேவையாகும். அல்லதுஇவர்களை பகிஷ்கரித்து ஒவ்வொரு முஸ்லிமும் மஸ்ஜிதுகளின் அடிப்படையில் ஒன்றிணைந்து பிரதேசவாதம், சுய நலங்களை புரந்தள்ளி ஒரு வலுவான அரசியல் சக்தியைகட்டியெலுப்புவதற்கு முன்வரவேண்டும்.

பேரினவாத கட்சிகள் எமது பிரது நிதித்துவத்தை குறைப்பதற்காக அதிகமாக முஸ்லிம் போட்டியாளர்களை களமிறக்குவதை நாம் காணலாம். இதனூடாக முஸ்லிம்களின் வாக்குகள்சிதறடிக்கப்படுகின்றது. இதற்கு சிறந்த உதாரணம் கொழும்பு, புத்தளம், திருகோணமலை பிரதேசங்களாகும். எமது ஒற்றுமையின்மை காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு போன்றபிரதேசங்களில் எமது பிரதிநிதித்துவம் குறைந்துள்ளதை நாம் காணலாம். புத்தளம், குருனாகல் மற்றும் களுத்தறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் எமது பிரதுநிதிகள்தெரிவு செய்யப்படாமை கவலைக்குறிய விடயமாகும். 1989 பாராளுமன்ற தேர்தலில் அபுஸாலி அவர்கள் இரத்தினபுரியில் இருந்து தெரிவு செய்யப்பட்டமையும் மறக்க முடியாத அம்சமாகும்.கண்டி, வன்னி மாவட்டங்களின் கடந்த கால தேர்தல் முடிவுகள் மற்றவர்களுக்கு சிறந்த உதாரண்மாகும். அப்பிரதேசங்களிம் ஒரு சீரான வளர்ச்சியை கடந்த காலங்களில் காண முடிகின்றது.

தற்போது நம் அரசியல் முகம் கொடுக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறந்த முறையில் பதிலடி கொடுப்பதற்கு ஒரு பலமான அரசியல் சக்தி எமக்கு அத்தியவசியமானதாகும். முஸ்லிம்ஆகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரு நிழலின் கீழ் ஒன்றினைவதனூடாக மாத்திரமே சாத்தியமாகும். சிறு சிறு விடயங்களை அலட்சியம் செய்வதனூடாக பாரிய விளைவுளுக்கு முகம்கொடுக்க வேண்டியது நாமும் எமது வருங்கால சந்ததியினரே ஆகும். மடிந்தது போதும் இனிவரும் காலங்களில் அனைவரும் ஒன்றாய் செயல்படுவோம். எல்லாம் வல்ல இறைவன் உதவிநிச்சயம்.


ஹஸான் மூஸா

No comments:

Post a Comment